;
Athirady Tamil News

யாழில். டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்!!

0

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தை யாழ்.மாவட்ட செயலகம் முன்னெடுக்கவுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி மற்றும் 17ஆம் திகதிகளில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் மாவட்டம் முழுவதுமாக முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார திணைக்களம் , உள்ளூராட்சி சபைகள் , மற்றும் பிரதேச செயலகங்கள் மூலம் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கிராம சேவையாளர்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

எனவே டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தில் பொது அமைப்புக்கள் , பொதுமக்கள் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட செயலகம் கோரியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.