;
Athirady Tamil News

எவரெஸ்ட் ஏறி சாதனை படைத்த தமிழக இளைஞர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!!

0

சென்னை கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை (27), எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து அடிவாரத்திற்கு திரும்பி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், ராஜசேகர் பச்சைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள்.

அந்தவகையில் கோவளத்தைச் சேர்ந்த ராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தைத் தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு எனது பாராட்டுகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.