;
Athirady Tamil News

ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு சிறந்த எடுத்துக்காட்டு கர்நாடக தேர்தல் வெற்றி – சரத் பவார்!!

0

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மீட்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் புனேவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வயநாடு தொகுதியின் முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி நடத்திய பாதயாத்திரைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது கர்நாடக தேர்தல் வெற்றி.

ராகுல் காந்தி சித்தாந்தத்தை மக்கள் வலுப்படுத்துவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக நிலைமை மாறி வருவதை நமக்கு காட்டுகிறது. அங்கு சாமானிய மக்களின் அரசு பதவியேற்றுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் நாம் பார்த்ததை நாட்டின் பிற இடங்களிலும் பிரதிபலிக்க முடியும் என தெரிவித்தார். ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.