;
Athirady Tamil News

இலங்கைப் பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

0

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம், அறநெறி பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தர அழகியல் நடைமுறைப் பரீட்சைகளை நேற்று (24) மற்றும் இன்று (25) எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒரு மாணவர் ஒரே நாளில் இரண்டு பரீட்சைகளையும் எழுத வேண்டியிருந்தால், அவர்களுக்கு க.பொ.த. சாதாரண தர நடைமுறைப் பரீட்சைகளுக்கு வேறொரு திகதி கிடைக்கக்கூடும்.

மேலும், அறநெறிப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் தேர்வுக்காகப் பெறப்பட்ட சேர்க்கைப் படிவம் மற்றும் வழங்கப்பட்ட சேர்க்கைப் படிவம் அல்லது அதன் சான்றளிக்கப்பட்ட நகலை அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் சம்பந்தப்பட்ட கல்வி வலயத்தின் அழகியல் கல்விப் பணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.