;
Athirady Tamil News

உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதல் – சிதைக்கப்பட்ட ரஷ்ய எண்ணெய்க் குழாய் கட்டமைப்பு!

0

உக்ரைன் – ரஷ்ய யுத்தமானது 15 மாதங்கள் கடந்தும் முடிவில்லாமல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

ரஷ்யா கைப்பற்றியுள்ள உக்ரைனின் பகுதிகளை மீட்பதற்கு உக்ரைன் அதிரடியாக பதில் தாக்குதல்களை தொடுத்து வருகிறது.

இந்தநிலையில், ரஷ்யாவில் உள்ள எண்ணெய்க் குழாய்கள் மீது உக்ரைன் ஆளில்லா விமானம் கொண்டு தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பாவுக்குள் எண்ணெய் கொண்டுசெல்லும் டுரூஸ்பா (Druzhba) குழாய் தாக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இருப்பினும், குறித்த குழாயின் செயல்பாடு பாதிக்கப்பட்டதா என்பது பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

குறித்த தாக்குதலுக்கு சில மணிநேரத்துக்கு முன்பாக, ரஷ்யாவின் ஸ்கோவ் (Pskov) வட்டாரத்தில் உள்ள மற்றுமோர் எண்ணெய்க் குழாய் கட்டமைப்பு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இரண்டு ஆளில்லா விமானங்கள் மூலம் அங்கிருந்த நிர்வாகச் சேவைக் கட்டடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.