;
Athirady Tamil News

பிரிஜ்பூஷன் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்- பிரியங்கா காந்தி!!

0

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போராட்டம் நடத்தும் இடத்துக்கு சென்று மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து பேசினார்.

இதற்கிடையே பிரிஜ்பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் இரண்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். அதில் அவர் மீது கடுமையான குற்றச் சாட்டுகள் கூறப்பட்டு இருப்பது குறித்து ஊடகத்தில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘பிரதமர் மோடி, இந்த கடுமையான குற்றச்சாட்டுகளை படித்து குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து நாட்டுக்கு பதில் சொல்லுங்கள்.

பிரிஜ்பூஷன் சிங்கை பிரதமர் மோடி தொடர்ந்து நாட்டின் பெண் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி அமைதியாக இருக்கிறார். விளையாட்டுத்துறை மந்திரி கண்ணை மூடிக் கொள்கிறார். பிரிஜ்பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசார் தொடர்ந்து பாதுகாத்து வருகிறார். தாமதப்படுத்தி வருகின்றனர். இவரை ஏன் அரசும், பா.ஜனதாவும் பாதுகாக்கின்றன? ஏதேனும் பதில்கள் உள்ளதா? என்று கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.