;
Athirady Tamil News

தாயக உறவுகளோடு, ஜேர்மனி திரு.திருமதி.தர்ஷான் சோபிகா தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)

0

தாயக உறவுகளோடு ஜேர்மனி திரு.திருமதி.தர்ஷான் சோபிகா தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)
#############################

தாயக பிரதேசங்களான புங்குடுதீவு மற்றும் சங்கானையைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளின் பதிவுத் திருமணம் மற்றும் திருமண நிகழ்வுகள் ஜேர்மன் நாட்டில் கடந்த 20.08.2021 இடம்பெற்றது. இதன் போது ஓமந்தை மாணிக்கவளவு கிராமத்தில் உள்ள ஆலயத்தில் திரு.இருமதி தர்ஷான் சோபிகா திருமண நிச்சயதார்த்தம் சிற்பாக அமைய வேண்டி விசேட பூசையினையும் கலந்து கொண்ட மக்களுக்கு திருமண விருந்துபசாரமும் தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கப்பட்டது.

அவ்வாறே புதுத் தம்பதிகள் தமது திருமணத்தை தாயக உறவுகளோடு கொண்டாட வேண்டி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டதிற்கிணங்க சிறப்பாக கோழிச் சாப்பாடு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதிற்கிணங்க இன்றைய நாளில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” நிர்வாக சபை உருப்பினரும், மாவட்ட அமைப்பாளருமான திருமதி நவரத்தினம் பவளராணி அவர்களின் நேர்த்தியான ஒழுங்கமைப்பில் வவுனியா கிராமமொன்றில் அங்கு வாழும் குடும்பங்களுக்கு மதிய விசேட உணவு வழங்கப்பட்டது.

மன்னார் அடம்பன், மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும், ஜெர்மனி நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி.உதயகுமார் கீதா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன் செல்வன்.தர்ஷான் அவர்களுக்கும், சங்கானையைச் சேர்ந்தவர்களும், ஜெர்மனி நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி.தவராசா நந்தினி தம்பதிகளின் அன்புப்புதல்வி செல்வி.சோபிகா ஆகிய இருவருக்கும் பெற்றோரின் முன்னிலையில் கடந்த 20.08.2021 அன்று பதிவுத் திருமணம் நடைபெற்றது.

இந்நிகழ்வை தாயகத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் விசேடமாக ஆலய பூசை மற்றும் விசேட மதிய விருந்துபசார ம் வழங்கி சிறப்பாக கொண்டாடியது. இருப்பினும் திரு.திருமதி தர்ஷான் சோபிகா தம்பதிகளின் திருமண விருந்தினை தாயகத்தில் கொண்டாட கொரோனா நோய் தடையினால் முடியாமல் போய்விட்டது .

தற்போதைய தடைகள் நீங்கிய சூழ்நிலையில் திரு.திருமதி தர்ஷான் சோபிகா அவர்களின் நிதிப்பங்களிப்பில் அவர்கள் விரும்பிய தாயக உறவுகளுக்கான திருமண விசேட அசைவ விருந்துபசாரம் இன்று மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் சிறப்பான வகையில் ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட கிராமத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டது.

புதுத் தம்பதிகளான திரு.திருமதி தர்ஷான் சோபிகா தம்பதிகள் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ்கவென தாயக உறவுகளோடு “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” வாழ்த்துகிறது.

அத்தோடு தமது திருமண நாளினை முன்னிட்டு தாயக உறவுகளுக்கு மதிய அசைவ விசேட உணவினை வழங்குவதற்கு நிதிப்பங்களிப்பு செய்தமைக்காகவும் தம்பதிகளுக்கு நன்றியுடன் வாழ்த்துக்களையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

17.10.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.