சின்ன இங்கிலாந்தில் வெளிநாட்டு கஞ்சா செடி: ஒருவர் கைது !!
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு cட்பட்ட பிளக்பூல் பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை விசேட அதிரடி படையினர் இன்று (15) மாலை 4 மணியளவில் கைது செய்தனர்.
பிளக்பூல் பகுதியில் அமைந்துள்ள தனிவீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நுவரெலியா பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையிலேயே வெளிநாட்டு கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்களால் வளர்க்கப்பட்ட 70 தொடக்கம் 77 கஞ்சா செடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த கஞ்சா செடிகள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது எனவும் , வீட்டில் மூன்று அறைகளில் வளர்த்து வந்ததாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒப்புக்கொண்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், நுவரெலியா பிளக்பூல் பகுதியில் மேலும் சில இடங்களில் கஞ்சா செடி வளர்க்கப்படுகிறதா என்றக் கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.