;
Athirady Tamil News

தோல்வியை ஒப்புக்கொண்ட உக்ரேன் – சோகத்துடன் அறிவித்த ஜெலென்ஸ்கி !!

0

ரஷ்யாவிடம் பாக்முட் நகரத்தை இழந்துவிட்டதை உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சோகத்துடன் ஒப்புக்கொண்டுள்ளார்.

உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பதில், உக்ரைன் பாக்முட் நகரத்தை ரஷ்யாவிடம் இழந்ததை உறுதிப்படுத்துகிறது.

ஜப்பானில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திப்பதற்கு முன், செய்தியார்களிடம் பேசிய ஜெலென்ஸ்கியிடம், பாக்முட் நகரத்தின் தற்போதைய நிலை என்னவென்று கேட்டபோது,

பாக்முட்டில் இப்போது “எதுவும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அனைத்தையும் அழித்துவிட்டார்கள். இன்றைக்கு, பாக்முட் எங்கள் இதயங்களில் மட்டுமே உள்ளது” என ஜெலென்ஸ்கி சோகத்துடன் கூறினார்.

“இல்லை என்று நான் நினைக்கிறேன்” என்று அவரது நீண்ட, உணர்ச்சிகரமான பதிலில் இழந்த பிரதேசத்தைப் பற்றி பேசுவதில் அவர் எதிர்கொண்ட சிரமம் பிரதிபலித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.