;
Athirady Tamil News

கொடிய விஷமுள்ள பாம்பை கடித்து கொன்ற குழந்தை

0

குழந்தை ஒன்று பாம்பை, பொம்மை என எண்ணி வாயில் வைத்துக் கடித்ததில் பாம்பு உயிரிழந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

குழந்தை மயங்கிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பரிசோதனையின் போது குழந்தையின் உடலில் விசம் கலக்கவில்லை எனவும் குழந்தை நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ‘பாம்பு கடி’ சம்பவத்துக்குப் பிறகு, அனைவரின் கவனத்தையும் அந்தக் குழந்தை ஈர்த்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.