;
Athirady Tamil News

மாஸ்க் கட்டாயம்; பரவும் வைரஸ் காய்ச்சல் – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

0

முகக்கவசம் அணியவேண்டுமென பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்கள் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் காய்ச்சலின் பரவல் சற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து சுகாதாரத்துறை, கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும்.

காலநிலை மாற்றம், மழை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களாக வைரஸ் காய்ச்சல் பரவிவருவதால்,

மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வோர் கவனமுடன் இருக்க வேண்டும். முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.