வேலைக்கு சென்ற 24 வயது இளைஞனுக்கு நேர்ந்த பெரும் துயரம்
இரண்டு மாடிக் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது கொங்க்ரீட் கலவை இயந்திரத்தின் கீழ் சிக்கி 24 வயது இளைஞன் ஒருவர் நேற்று (06) உயிரிழந்துள்ளார்.
களுத்துறையில் பிரதேசத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சக பணியாளர்கள் அவரை பலத்த காயங்களுடன் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் , இளைஞன் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.