யாழில். இயந்திரங்கள் மூலமான கரைவலை தொழிலை தடுக்க கோரிக்கை
;
பாரம்பரிய மீன்பிடித் தொழிலையும், எமது மீனவ சமூகத்தின் உரிமைகளையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. எனவே கரைவலைத் தொழிலில் இயந்திர பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் ஆலோசனைகள் பெறப்படும்.
எமது கடல் வளங்களை பாதுகாத்து, எதிர்கால தலைமுறைகளுக்கான நிலைத்த கடற்றொழிலை உறுதி செய்வதே எமது நோக்கம் என கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பின் போது, அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளரும் உடனிருந்தனர்.