;
Athirady Tamil News

21 வயது இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

0
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் நேற்று திங்கட்கிழமை அறுவடை செய்த நெல்லை உலர விட்டுக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்
குறித்த பகுதியினைச் சேர்ந்த பத்மநாபன் அகிலன் (வயது 21) என்பவரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.