;
Athirady Tamil News

அரச ஓய்வூதியக் கொடுப்பனவு மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

0

அரச ஓய்வூதியக் கொடுப்பனவு மறுசீரமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

மறுசீரமைப்புத் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பாக விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சர் சந்தன அபேரத்ன உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இணையவழி கட்டமைப்பு
அமைச்சரின் தகவலின்படி, ஓய்வூதியக் கொடுப்பனவு மறுசீரமைப்பின் முதற்கட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகளில் 98 சதவீதம் ஏற்கனவே முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

ஓய்வூதியத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, மொத்தம் 4 இலட்சத்து 63 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2,500 புதிய ஓய்வூதியப் பயனாளிகள் இக்கட்டமைப்பில் இணைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வூதியக் கொடுப்பனவு விநியோக செயல்முறையை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில், பிரதேச செயலகங்கள் மட்டத்தில் இணையவழி (Online) கட்டமைப்பு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் இதுவரை சுமார் 3 இலட்சத்து 97 ஆயிரத்து 154 ஓய்வூதியதாரர்களின் தரவுகள் கணினிமயப்படுத்தப்பட்டு, கொடுப்பனவு நடைமுறைகள் தானியக்கமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.