;
Athirady Tamil News

இந்திய மாம்பழங்களுக்குத் தடை விதித்த ஜப்பான்! ஏன்?

0

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களுக்கு ஜப்பான் தடை விதித்துள்ளது.

இந்திய மாம்பழங்களில் பூச்சிகள் காரணமாக, 1986-ல் ஜப்பானில் இந்திய மாம்பழங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தடை நீக்கப்பட்டு, மீண்டும் இந்திய மாம்பழங்கள் ஏற்றுமதி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் தடை விதித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மாம்பழங்களைப் பதப்படுத்தும் ஆலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மாம்பழங்களைக் கிருமிநீக்கம் செய்யப் பயன்படுத்தப்படும் புகைமூட்டும் செயல்முறையில் குறைபாடுகள் இருப்பதாக ஜப்பானிய அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்தியாவின் பதப்படுத்தும் ஆலைகளில் செயல்பாட்டுத் தரங்கள் மேம்படுத்தப்படும் வரையில், மாம்பழம் இறக்குமதி நிறுத்தப்படுவதாக ஜப்பான் அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.