;
Athirady Tamil News

குடியிருப்பு கட்டடத்தில் மோதி வெடித்த ட்ரோன் ; ரஷ்யாவுக்கு பறந்த எச்சரிக்கை

0

உக்ரைன் நோக்கி ஏவப்பட்ட ரஷ்ய ட்ரோன், அண்டை நாடான ருமேனியாவின் கலாட்டி நகரில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றில் மோதி வெடித்தது.

இதில் ஒரு பெண்ணும் குழந்தையும் லேசான காயமடைந்தனா். ‘நேட்டோ’ உறுப்பு நாட்டின், மக்கள்தொகை அதிகம் கொண்ட குடியிருப்புப் பகுதியில் ரஷ்ய ட்ரோன் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இச்சூழலில், ருமேனிய அதிபா் நிக்குஷா் டானுடன் நேட்டோ பொதுச் செயலா் மாா்க் ருட்டே அவசர ஆலோசனை நடத்தினாா்.

இதையடுத்து, ரஷ்யாவின் இப்பொறுப்பற்ற செயலைக் கண்டித்த மாா்க் ருட்டே, உறுப்பு நாடுகளின் ஒவ்வொரு அங்குலப் பகுதியையும் பாதுகாக்க நேட்டோ தயாராக இருப்பதாக எச்சரித்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.