;
Athirady Tamil News

கென்யா பள்ளி தீவிபத்தில் திருப்பம்: தீ வைப்பு குற்றச்சாட்டில் மாணவிகள் கைது

0

கென்யாவில் பெண்கள் பள்ளி விடுதியில் 16 மாணவிகள் உயிரிழந்த தீ விபத்தில், திட்டமிட்டு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 8 மாணவிகளை அந்நாட்டு போலீசாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காவல்துறையால் நிா்வகிக்கப்படும் இந்த மேல்நிலைப் பள்ளியில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 79 போ் காயமடைந்தனா்.

இச்சம்பவம் தொடா்பான முதல்கட்ட விசாரணையில், மாணவிகளின் விபரீத தீ வைப்புத் திட்டம் குறித்து அப்பள்ளியின் ஆசிரியா்கள் இருவருக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்தும், அதைத் தடுக்க அவா்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற அதிா்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

விபத்தையடுத்து பள்ளியின் நிா்வாகக் குழுவைக் கலைத்து உத்தரவிட்டுள்ள கென்ய அரசு, கடமைத் தவறியவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.