;
Athirady Tamil News

வடலூர் அருகே முகம் சிதைந்த நிலையில் இளம்பெண் சடலமாகக் கண்டெடுப்பு

0

சென்னை,

கடலூர் மாவட்டம், வடலூர் கண்ணுத்தோப்பு பாலத்தின் அருகில், விக்கிரவாண்டி – கும்பகோணம் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இந்தப் பகுதியில் 30 வயது இளம்பெண் ஒருவர் அரைகுறையாக புதைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவலை வடலூர் காவல் நிலையத்துக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

அதன்பின் சம்பவ இடத்துக்கு விரைந்த வடலூர் போலீசார் முகம் சிதைந்த நிலையில், காலில் அணிந்திருந்த கொலுசு தெரியும்படி புதைக்கப்பட்ட உடலைக் கண்டு, பெண்ணின் உடலை மீட்டனர்.

முகம், வாய் மற்றும் மூக்கு பகுதியில் காயம் இருந்தது. துப்பட்டாவால் அவரது கைகள் கட்டப்பட்டிருந்தன. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்விரோத பகையா?
அந்தப் பெண்ணை கம்மல் மற்றும் தாலி போன்றவைக்காக கொலை செய்தார்களா அல்லது பாலியல் வன்கொடுமைக்குப் பின் கொலை செய்து புதைத்தனரா? அல்லது முன்விரோத பகையா? என பல்வேறு கோணங்களில்போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அந்த இளம்பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விக்கிரவாண்டி – கும்பகோணம் புதிய சாலையில் இளம்பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.