ஈரான் – அமெரிக்கா மோதல்: கத்தார் சென்றடைந்த அமெரிக்க தூதுக்குழு!
ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கத்தாரில் நிகழும் பேசுவார்த்தைக்காக அமெரிக்க தூதுக்குழு செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) கத்தார் சென்றடைந்துள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையே நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்பட்டதையடுத்து, ஸ்விட்சர்லாந்தில் இரு நாடுகளும் இடைக்கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக திறக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சிங்கப்பூர் நாட்டு சரக்குக் கப்பல், ஹோர்முஸ் நீரினையைக் கடக்கும் போது, ஈரான் அந்தக் கப்பலை தாக்கியது.
அந்தக் கப்பலானது, ஈரான் கடலோரப் பகுதியில் செல்லாமல் மற்றொரு பதையில் சென்றதால் அதனை தாக்கியதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் தொடர்ந்தன.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், “ஈரான் தரப்பில் ஒரு சந்திப்பைக் கோரியுள்ளனர். இந்த சந்திப்பானது கத்தாரில் உள்ள தோஹாவில் நாளை நடைபெறும்” என்று நேற்று பதிவிட்டிருந்தார்.
அதன்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இன்று கத்தார் சென்றடைந்தனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பது குறித்தும் போரை முழுவதுமாக நிறுத்தும் இறுதி ஒப்பந்தம் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஈரான் தரப்பில் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.