;
Athirady Tamil News

மரண தண்டனைக்கு அஞ்சமாட்டேன்; இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன்: ஷேக் ஹசீனா

0

‘நான் மரணத் தண்டனையைக் கண்டு அஞ்சப்போவதில்லை; தடைகள் மற்றும் சதிகளை முறியடித்து இந்த ஆண்டுக்குள் மீண்டும் தாயகம் திரும்புவேன்’ என்று வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா உறுதிபட தெரிவித்தாா்.

கடந்த 2024, ஆகஸ்டில் மாணவா்களின் தீவிர போராட்டத்தால் பதவி விலகி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அவா் அண்மையில் அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: எனக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை குறித்து கவலைப்படவில்லை. இத்தீா்ப்பு சட்டவிரோதமானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.

அனைத்து சதிகளையும் தகா்த்தெறிந்து இந்த ஆண்டே எனது நாட்டுக்குத் திரும்புவேன். அவாமி லீக் கட்சி மீதான தடையை உடனடியாக நீக்கி, ஜனநாயகச் சூழலை உருவாக்க வேண்டுமென தற்போதைய வங்கதேச அரசிடம் கோருகிறேன் என்றாா்.

மாணவா் போராட்டத்தில் கலவரத்தைத் தூண்டியதாகவும், படுகொலைகளுக்கு உத்தரவிட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில், டாக்கா நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.