;
Athirady Tamil News

வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய கார்

0

அம்பாறை மாவட்டம் இறக்காமம் – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.

திங்கட்கிழமை (20) இரவு இறக்காமம் – அக்கரைப்பற்று பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியுள்ளது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்த இறக்காமம் பொலிஸார் விபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.