;
Athirady Tamil News

கஞ்சா பயிரிட்டால் IMF செல்ல தேவையில்லை!!

கஞ்சா பயிரிடுவதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்தார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத்…

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு வருடாந்தம் தங்கப்பதக்கங்கள் இலங்கை பட்டயக்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடத்திலுள்ள கணக்கியல், நிதிமுகாமைத்துவம் மற்றும் வணிகம் (கணக்கியலும், நிதியும்) ஆகிய துறைகளில் பயின்று சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் பட்டமளிப்பு…

NMRA தரவுகளை நீக்கிய மென்பொருள் பொறியியலாளருக்கு பிணை!!

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் தரவுகளை நீக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எபிக் லங்கா டெக்னாலஜி நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளர் பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் புத்திக சீ ராகலவினால்…

யாழ்.மாநகரசபையில் ஆணையாளர் உட்பட 15 பேருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஆணையாளர் த.ஜெயசீலன் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநகரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகள் ஊடாக குறித்த தொற்றாளர்கள் அடையாளம்…

இரு நாடுகள் இடையேயான போட்டி மோதலாக மாறக்கூடாது- சீன அதிபருக்கு ஜோ பைடன்…

உலகின் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே தற்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. வர்த்தகம், கொரோனா வைரஸ், ஹாங்காங், தைவான் ஆகிய நாடுகள் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடையே இரு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு…

‘ஐமச’ யின் பேரணி மீது குண்டு வீசுவதாக கூறிய நபர் கைது!!

கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியின் மீது குண்டு வீசுவதாக குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு முன்பாக கடிதம் ஒன்றை வைத்து சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரின் தலைமை பாதுகாப்பு…

மனைவிக்கு முத்தலாக் கூற மறுத்த கணவன்: கோபத்தில் அடித்து உதைத்த உறவினர்கள்…!!

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் முத்தலாக் கூறி தனது மனைவிக்கு விவாகரத்து வழங்க முடியும். வாட்ஸ்-அப் மூலம முத்தலாக் கூறி விவாகரத்து பெற்ற சம்பவம் கூட நடைபெற்றுள்ளது. இதனால் விவாகரத்து பெறும் பெண்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுவதுண்டு.…

சிங்கப்பூர் செல்லும் இந்தியர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு…!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிநாட்டு பயணிகள் இந்தியா வருவதற்கு மத்திய அரசு தடை விதித்தது. 1½ ஆண்டுகளுக்கு மேலாக இந்த தடை நீடித்தது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால் கடந்த மாதம் 15-ந் தேதி…

ஈஸ்டர் தாக்குதல் – பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அதிரடி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் நேற்று (16) இரவு பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்து விசாரணைக்காக…

வீடு தேடி வரும் ரேஷன் பொருள் திட்டத்தை தொடங்கி வைத்தார் மம்தா பானர்ஜி…!!

மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. கடந்த செப்டம்பரில் 3 ஆயிரம் ரேஷன் பணியாளர்கள் மூலம் சிறிய அளவில் துவரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்தியது அம்மாநில…

கொரோனா பரவல் எதிரொலி- சீனாவில் 1500 மாணவர்கள் விடுதி, ஓட்டல்களில் அடைத்து வைப்பு…!!

கொரோனா தொற்று முதன் முதலில் சீனாவில் தான் ஏற்பட்டது. பின்னர் உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. அதன்பிறகு பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் உச்ச நிலையில் இருந்தாலும் சீனாவில் கட்டுக்குள்ளேயே இருந்தது. இந்தநிலையில் சீனாவின் டலியான்…

ஒரு சிகரெட்டின் விலை 100 ரூபா வரை அதிகரிக்கும்!

சிகரெட் ஒன்றின் விலையை நிர்ணயம் செய்வதற்கு மிகவும் விஞ்ஞான ரீதியில் வடிவமைக்கப்பட்ட விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சியடைவதாகவும், சிகரட் ஒன்றின் விலையை ரூபா 5 ஆல் அதிகரித்ததைத் தொடர்ந்து, அடுத்த வருடம் அரசாங்கம்…

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் பூஸ்டர் டோஸ்!!

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இன்று (17) முதல் வழங்கப்படவுள்ளது. பூஸ்டர் டோஸாக பைசர் கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் அம்பாறை…

கர்தார்பூர் பாதை இன்று திறக்கப்படும் – உள்துறை மந்திரி அமித்ஷா…!!!

பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இடத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா உள்ளது. இந்தப் புனித தலத்திற்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் விசா இன்றி செல்வதற்காக இந்தியாவில் பஞ்சாப்…

மழை வெள்ளத்தில் இருந்து காக்க ஜப்பானில் பூமிக்கு அடியில் ஒரு கோவில்…….!!!

வெயில் சுட்டெரித்தால் வறட்சி. மழை பெய்தால் வெள்ளம். இதுதான் தமிழக தலைநகர் சென்னையின் பரிதாப நிலை. வெயில் காலத்தில் குடிநீருக்கு அலையாய் அலைகிறோம். மழை காலத்தில் வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கிறோம். நமக்கு வெயிலாலும் பிரச்சினை. மழை…

சிறை தண்டனை விதிக்கப்பட்ட மூன்றே நாட்களில் சிறையில் இருந்து அமெரிக்க பத்திரிகையாளர்…

ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மரில் இணையதள பத்திரிகை ஒன்றில் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அமெரிக்க பத்திரிகையாளரான டேனி பென்ஸ்டா். 37 வயதான இவர் கடந்த மே மாதம் ராணுவ ஆட்சியாளா்களால் கைது செய்யப்பட்டார். அவா் மீது தவறான…

தர்மபுரியில் கிணற்றுக்குள் விழுந்த கார்: தந்தை, மகள் உயிரிழப்பு…!!

தர்மபுரி மாவட்டம் பென்னேரி பகுதியில் கார் ஒன்று கிணற்றுக்குள் விழுந்தது. இதில் காருக்குள் இருந்த தந்தை மற்றும் மகள் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாத மக்களின் பட்டியல் தயாரிப்பு: இரண்டு நாள் சிறப்பு முகாம்…

பொதுமக்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி பெறத் தகுதியான நபர்களில் 73 சதவிகித மக்களுக்கு முதல் தவணை…

19-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாலும், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் தமிழகத்தில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. டெல்டா…

கலசபாக்கம் அருகே மனைவியை அடித்து கொன்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை…!!

கலசபாக்கத்தை அடுத்த கப்பலூர் மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 58) விவசாயி. இவரது இரண்டாவது மனைவி வளர்மதி. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.…

5000 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த செவிலியர் தனது பிரசவத்தின்போது பலி…!!

மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி கவ்லி (38). அங்குள்ள அரசு மருத்துவமனையின் பிரசவ அறையில் பணியமர்த்தப்பட்டு செவிலியராக பணிபுரிந்து வந்தார். அதற்கு முன்பாக, இரண்டு சுகாதார மையங்களில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.…

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரிப்பு…!!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் தொடர்பான விவரங்களை சுகாதாரத்துறையினர் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று 802 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 12 மாவட்டங்களில் நோய் தொற்று சற்று அதிகரித்துள்ளது. மதுரையில் நேற்று…

உனைஸ் நகர் கிராமத்திற்கு சர்வோதய மாவட்ட இணைப்பாளர் துஷ்யந்தன் விஜயம்!! (படங்கள், வீடியோ)

மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சர்வோதய மாவட்ட இணைப்பாளர் உ. துஷ்யந்தன் (08) விஜயம் செய்தார். கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி பிரதேச செயலகப் பிரிவில்…

மீண்டும் மீண்டும் சூடு காணும் பூனைகள்!! (கட்டுரை)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அவ்வப்போது பேசுகிற விடயங்கள் சிலவேளைகளில் அர்த்தமற்றதாகவும் முன்னுக்குப் பின் முரணானதாகவும் தோன்றலாம். அரசியல், சிவில் நிர்வாக அனுபவம் இன்மையின் விளைவுகளாக இவற்றைக் கொள்ளலாம். அதனால்தான், விடயங்கள் சாதகமாக…

மஞ்சள் கோட்டில் கால் வைத்தால் வாகனம் நிற்கும் என்ற நம்பிக்கை கொண்டோம் – மாணவி…

பல ஆசைகளின் மத்தியில் தான் பாடசாலை போனோம்.மஞ்சள் கோட்டை கடந்தால் வாகனம் நிற்கும் என்ற நம்பிக்கையில் தான் போனோம். முதலாவது கால் வைக்க முதலாவதாக வந்த வாகனம் நின்றது. தொடர்ந்து நடந்தோம் அடுத்த அடி வைக்க அடுத்த வாகனமும் நின்றது. மூன்றாவதாக…

பெருந்துறை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை..!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி மல்லிகா (வயது 60). இவர்களுக்கு அமுதா (30), பூவிழி (28) என 2 மகள்கள் உள்ளனர். இதில் பூவிழிக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. சின்னசாமி கடந்த சில…

பிரபல நடிகரின் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விபத்தில் பலி!

இந்தியா பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற வீதி விபத்தில், காலமான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூத்த ஹரியானா பொலிஸ் அதிகாரி ஓ.பி.சிங்கின் சகோதரி கீதா…

மரக்கறிகள் இறக்குமதி?

மரக்கறிகளை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கத்திற்கு எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை…

பௌத்த அறநெறி பாடசாலைகளை திறக்க ஆலோசனை!!

இம்மாதம் 28 ஆம் திகதி முதல் அனைத்து பௌத்த அறநெறி பாடசாலைகளும் திறக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதி…

குழந்தைகளுக்கு பொழுது போகவில்லையா? (மருத்துவம்)

கொரோனா வைரஸால் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு விட்டதால் குழந்தைகள் வீட்டில் சுற்றி சுற்றி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் போரடிக்குதுமா… என குரல் கொடுக்கிறார்கள். இவர்களை செயல் வீரர்களாக மாற்ற சில யோசனைகள். * குழந்தைகளை காலையில் அல்லது…

வவுனியாவில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது!!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்று (16.11) இடம்பெற்று இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தாண்டிக்குளம்…

புங்குடுதீவு அமரர் தர்மலிங்கம் புவனேஸ்வரி அவர்களது மூன்றாவது நினைவு நாள் தாயகத்தில்…

புங்குடுதீவு அமரர் தர்மலிங்கம் புவனேஸ்வரி அவர்களது மூன்றாவது நினைவு நாள் தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ) ########################################### புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர். திருமதி. தர்மலிங்கம்…

வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் அதிரடி பணிப்புரை…!

வட மாகாணத்தில் A9 பிரதான வீதியில் அனுமதியற்ற வாகனங்களை நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் ஏ9 பிரதான வீதியின் இருபுறங்களிலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வட மாகாண சிரேஷ்ட பிரதி…

இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் – பிரதமரின் முழு உரை இணைப்பு…!!

கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (16) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பின் போதே…