;
Athirady Tamil News
Yearly Archives

2023

“செயற்கை கருத்தரிப்பு என் தந்தைக்கு ஒரு பேரக் குழந்தையைக் கொடுக்க உதவியது”!!

திருமணமாகாமல் தனியாக வசிக்கும் கீரா, தனது தந்தைக்கு ஒரு பேரக்குழந்தையைப் பெற்றுக்கொடுக்க செயற்கை கருத்தரிப்பு முறையை நம்பினார். நோய்வாய்ப்பட்டுள்ள ஒரு ஆண், தனது பேரக்குழந்தையை முதல் முறையாக பார்க்கும் தருணம் இது. "உணர்ச்சிப்பெருக்கான…

ATM இயந்திரங்களில் இருந்து பண மோசடி செய்த கும்பல் !!

வங்கிகளின் ATM இயந்திரங்களில் இருந்து பண மோசடி செய்த கும்பல் குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர். ​ இந்த சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட பொலிஸார் கடந்த சில தினங்களில் இடம்பெற்ற…

ஓய்வு பெற்றோரை தக்கவைக்க அனுமதி !!

சேவையின் தேவை கருதி, சனிக்கிழமையுடன் (31) ஓய்வு பெறவிருந்த இலங்கை ரயில் திணைக்கள ஊழியர்களை, தேவைப்பட்டால் ஒப்பந்த அடிப்படையில் தக்கவைத்துக் கொள்ள ஜனாதிபதியின் செயலாளரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க,…

சூரியன் முதல் சந்திரன் வரை பல திட்டங்களை செயல்படுத்தி 2023-ல் சாதனைக்கு தயாராகிறது இஸ்ரோ!!

ஆதித்யா, சந்திரயான்-3, ககன்யான்விண்கலங்கள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஆர்எல்வி ராக்கெட்டை தரையிறக்குவது உட்பட அறிவியல் சோதனைகள் பலவற்றை இந்தாண்டு மேற்கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ 2023-ம் ஆண்டில்…

பரம்பரை பரம்பரையாக நாங்கள் தொழில் செய்தோம் – அ.அன்னராசா!!

கடலட்டையை யாரும் தற்போது கொண்டு வரவில்லை. அதனை வைத்து பரம்பரை பரம்பரையாக நாங்கள் தொழில் செய்தோம் என தெரிவித்த யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா தனிநபர் முயற்சியில் உருவாக்கப்பட்ட விடயங்களை…

தொப்பையை போக்க உதவும் கெரட் / தோடம்பழச்சாறு கலவை!! (மருத்துவம்)

இன்று பலர் உடல் பருமன் மற்றும் தொப்பையால் அவதிபட்டுவருகிறார்கள். இதைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றினாலும், அதில் ஒரு சிறப்பான வழி பழச்சாறுகள் ஆகும். ஒருவரது உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைப்பதற்கு பலவிதமான பழச்சாறு வகைகள்…

தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களைத் தோற்கடிக்கக் கூடாது !! (கட்டுரை)

அமையும் சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகக் கையாளும் சமூகமே, அரசியல் வெற்றியை சுவைக்கும்; இலக்குகளை அடையும். மாறாக, அமையும் சந்தர்ப்பங்களை கையாளத் தெரியாமல், தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்திக்கும் சமூகம், பெரும் தோல்வியின் அடையாளமாக மாறும்.…

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்ததால் ரொனால்டோ தடைகளுக்கு ஆளானார்” – துருக்கி அதிபர்!!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் ரொனால்டோ அரசியல் ரீதியான தடைகளுக்கு உள்ளானார் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். 2022 உலகக் கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில்…

புத்தாண்டை கொண்டாட உ.பி. மாநிலம் அயோத்தியில் குவிந்த 50 லட்சம் பேர்!!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது அயோத்தியில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதேபோல புத்தாண்டை ஒட்டியும் அயோத்தியில் லட்சக் கணக்கான மக்கள்…

உண்மையில் இது போருக்கான காலம் இல்லைதான்… உக்ரைன் – ரஷ்ய போர் உணர்த்துவது என்ன?

இந்தப் போருக்கு இடையே பிறந்த குழந்தைகளை பயத்தில் உறைந்த சமூகம்தான் வரவேற்கிறது. இங்கே பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் அமைதி என்றால் என்னவென்று தெரியாமல் உள்ளனர்" உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கி இன்று 310-வது நாள். கடந்த பிப்ரவரி மாதம்…

ஜனாதிபதி மாளிகையில் 39 ஓவியங்கள் மாயம் !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கடந்த வருடம் ஜூலை 9ஆம் திகதி நடத்தப்பட்ட மக்கள் போராட்டத்தை அடுத்து, ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த பின்னர், அங்கிருந்த 39 ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் காணாமல் போயுள்ளன.…

மின் கட்டண அதிகரிப்பு: ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு !!

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எந்தவொரு யோசனையையும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிசீலிக்காது என்று ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். சட்டத்தை தவறாகப் புரிந்து கொண்டு . 'பொதுக்…

சஜித்துக்கு பொன்சேகா சாட்டையடி !!

பஸ்களை செலுத்துவதன் மூலமோ அல்லது பஸ்களுக்கு தீ வைப்பதன் மூலமோ ஒருவர் தலைவராக முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர்…

வட்டி வீதங்கள் குறித்து ஆளுநரின் கருத்து !!

2023 ஆம் ஆண்டில் வட்டி வீதங்கள் மற்றும் பணவீக்கத்தை குறைப்பதில் கவனம் செலுத்துவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு இன்று (01) விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…

முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்!!! (படங்கள்)

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி. மகேஸ்வரனின் 15வது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு…

கால்நடைகளுக்கான தடுப்பூசியை புனே நிறுவனம் வணிக ரீதியாக தயாரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!!

கால்நடைகளை தாக்கும் ஆட்டு அம்மை எனப்படும் தோல் நோயை கட்டுப்படுத்த, அரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய குதிரைகள் ஆராய்ச்சி மையமும், உத்தர பிரதேச மாநிலம் இசட்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி…

அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயலில் உறைந்த நயாகரா அருவி!

அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத பனிப்புயலுக்கு அங்குள்ள நயாகரா அருவி பாதி உறைந்த நிலையில் காணப்படுகிறது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கூடவே, பனிப்புயலும் மக்களை வாட்டி வதைக்கிறது. மிகக் கடுமையாக…

கிணறு வெட்டிய ரசீது! எடப்பாடிக்கு பெரிய அதிர்ச்சியை தந்த தேர்தல் ஆணையம்! டெல்லியில்…

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அளித்துள்ள பதில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் பொதுக்குழு வழக்கில் இந்த பதில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்று…

2023ம் ஆண்டு சிறப்பாக அமையட்டும்- பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து!!

உலகம் முழுவதும் இன்று 2023-ம் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.…

நண்பனுடன் சேர்ந்து துரோகம்.. “ப்ளே கேர்ள்” மனைவி.. ‘ஸ்கெட்ச்’…

தனது நண்பனுடன் முறையற்ற உறவில் மனைவி இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், அவர்கள் இருவரையும் வெட்டிக் கொன்ற பயங்கர சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. இளைஞர் பல முறை மனைவியைும், நண்பனையும் எச்சரித்தும் அவர்கள் அதை பொருட்படுத்தாததால், இந்த கொலை…

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஒரே…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரிமோட் ஓட்டுப்பதிவு தொடர்பான ஆலோசனைக்கு தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து…

இலங்கையில் இருந்து தப்பி தமிழகத்துக்குள் ஊடுருவிய ‘போதைப் பொருள்’ டான்…

இலங்கையில் இருந்து தப்பி இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபானி இம்ரான் ஊடுருவியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து ராமேஸ்வரம் உள்ளிட்ட இலங்கை எல்லை கடற்பகுதிகளில் போலீசார் உஷார்நிலையில் கண்காணிப்பு…

50 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

2023 புத்தாண்டின் ஆரம்பத்துடன் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களால் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ​ நேற்று (31) நள்ளிரவு முதல் தற்போது வரை இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக…

கில்ஜித் பல்திஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக மக்கள் போராட்டம்!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித் பல்திஸ்தானில் அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கில்ஜித் பல்திஸ்தானில் பொதுமக்களின் நிலங்களை ராணுவம் தொடர்ந்து கைப்பற்றி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

ஆந்திராவில் சிறுமியை கொன்று புதைத்த கள்ளக்காதல் ஜோடி!!

ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டம், கல்யாண துர்காவை சேர்ந்தவர் மாருதி நாயக்.லாரி டிரைவர்.இவருக்கும் பெங்களூரை சேர்ந்த கவிதா என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 3 மகன்களும், பிந்து (வயது 4) என மகள்…

முட்டை மாஃபியாவுடன் அமைச்சர்களுக்கு தொடர்பு?

முட்டையை அதிக விலைக்கு விற்கும் மாஃபியாவுக்கு சில அமைச்சர்கள் துணைபோவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது. ​ குளிர்சாதன அறைகளில் சேமித்து வைக்கப்படும் முட்டைகளை குறைந்த விலைக்கும், மீண்டும் அதிக விலைக்கும்…

பாலஸ்தீனர்களின் உரிமை மீறல் – ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்தது இந்தியா!!

பாலஸ்தீன நிலப் பகுதியை இஸ்ரேல் நீண்ட காலமாக ஆக்கிரமித்திருப்பது மற்றும் இணைத்திருப்பதன் சட்டரீதியான விளைவுகள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தின் கருத்தை கோரும் தீர்மானம் ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்டது. கிழக்கு ஜெருசலேம் உட்பட…

கொரோனாவால் இறந்த மனைவிக்கு சிலை வைத்த ஒய்வுபெற்ற அரசு ஊழியர்!!

கொல்கத்தா மேடம் துசார்ட் பகுதியை சேர்ந்தவர் தாபஸ் (வயது 65). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவரது மனைவி இந்திராணி. கணவன் மனைவி இருவரும் மாயாபூரில் உள்ள இஸ்கான் கோவிலில் தரிசனத்திற்கு சென்றனர். அப்போது அங்குள்ள கிருஷ்ணர் சிலையை கண்ட…

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் கார் விபத்தில் பலி!!

கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஆரவ் முதல்யா, 2 வயதான இவன் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவன். சம்பவத்தன்று இவன் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக அமெரிக்காவில் நேவாடா என்ற மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற…

கேரளாவில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- கல்லூரி மாணவர் பலி !!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள வளஞ்சேரியில் இருந்து மண்டல அளவிலான கல்லூரி மாணவர்கள், சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதற்காக ஒரு பஸ்சில் அவர்கள் புறப்பட்டனர். 44 மாணவர்கள் சுற்றுலாவில் கலந்து கொண்டனர். புத்தாண்டை சொந்த ஊரில் கொண்டாடும்…

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே உக்ரைனின் கிவ் நகரம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்!!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி 11 மாதங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. ரஷியாவை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் போராடி வருகின்றனர். இதன் காரணமாக ரஷியா கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் படை மீண்டும் மீட்டது. ரஷியா…

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நிறுத்தப்படுவதில் எந்த பிரச்சினையும் இல்லை- நிதிஷ்…

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில், பிரதமர் வேட்பாளராக யார் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்த பட்டியலில் சந்திரசேகர ராவ், சரத்பவார், நிதிஷ்குமார் பெயர்கள்…

3 ஆண்டுகளுக்குப் பின்னர் கடவுச் சீட்டு!!

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சீனாவில் கடவுச் சீட்டு வழங்கப்படும் பணியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் ஜனவரி 8ஆம் திகதி முதல் கடவுச் சீட்டு வழங்கப்படும் பணியானது, மீண்டும் நடைபெறவுள்ளதாக…