;
Athirady Tamil News

அமரர் விஜயபாலன் அவர்களின் ஓராண்டு நினைவு “M.F” ஊடாக அனுஷ்டிப்பு.. (வீடியோ படங்கள்)

0

அமரர் விஜயபாலன் அவர்களின் ஓராண்டு நினைவு “M.F” ஊடாக அனுஷ்டிப்பு.. (வீடியோ படங்கள்)

அமரர் விஜயபாலன் அவர்களின் ஓராண்டு நினைவு “M.F” ஊடாக அனுஸ்டிக்கப்பட்டது.
###################################

கல்விக் கொடைவள்ளல் சமுக ஆர்வலர் அமரர் ஆறுமுகம் விஜயபாலன் அவர்களது முதலாமாண்டு நினைவாக வவுனியா மன்னார் வீதி புதிய கோயில்குளம் சிவபுரம் ஆகிய கிராமத்தில் இடம் பெற்றது.

சாவகச்சேரி, டச்சு வீதி மருதடியைச் சேர்ந்தவரும், ஐக்கிய இராச்சியத்தின் Luton பிராந்தியத்தில் வசித்தவருமான அமரர் ஆறுமுகம் விஜயபாலனின் முதலாமாண்டு நினைவாக, சுவிஸ் நாட்டில் சொலோத்தூண் பகுதியில் வதியும் புளொட் அமைப்பின் உறுப்பினர் தோழர் லெனின் எனும் சிவகுரு செல்வபாலன் அவர்களின் புதல்வர்களான S. ஈழதர்சன், S. யாழீசன் ஆகியோரின் நிதிப் பங்களிப்பின் மூலமே மேற்படி உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.

மன்னார் வீதி சிவபுரம் கிராமங்களின் மத்தியில் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் அன்னாரின் முதலாமாண்டு நினைவு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இரு கிராமங்களில் இருந்து வருகை தந்த மக்களுக்கு விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.

முன்னதாக அன்னாரின் நினைவு கூறலை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் செயலாளரும் கவிஞருமான மாணிக்கம் ஜெகன் அவர்கள் நினைவுச் சுடரை ஏற்றி தீப ஆராதனை செய்து மலர் தூவி அன்னாரை நினைவு கூர்ந்தார். அதனைத் தொடர்ந்து அமரர் விஜயபாலன் அவர்களின் ஓராண்டு நினைவு தினத்திற்கு வருகை தந்தோர் மலர்தூவி வணங்கி அன்னாரை நினைவு கூர்ந்தனர்..

நிறைவாக வருகை தந்தோர் அனைவருக்கும் விசேட மதிய உணவு வழங்கப்பட்டது. அத்துடன் முதுமை மற்றும் நோய் காரணமாக வருகை தர இயலாதோருக்கு உணவுப் பொதி செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

இவ்வாறான பல்வேறு தரப்பட்ட சமூகப்பணிகள் அமரர் விஜயபாலன் ஐயா அவர்களின் முதலாமாண்டு ஆத்ம சாந்தி நிகழ்வுகளை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டன.

இவ்வாறே செக்கடிப்புலவு செல்வா நகரில் மாணிக்கதாசன் மறுமலர்ச்சி கல்விக் கூட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்னாரின் நினைவாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிகழ்வுகள் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் பெரும் முயற்சின் விளைவாகவே செய்யப்படுகிறது.

தாயக சொந்தங்களுக்கு இவ்வாறான உதவிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. தாயக சொந்தங்களே உறவுகளே தோழர்களே தொடர்ந்து உங்களுடைய உதவிகள் உயிர் காக்கும் நற்கொடைகளாக தொடர்ந்து உதவி செய்திட “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” வேண்டிக் கொள்கிறது.

அமரத்துவமடைந்த ஆறுமுகம் விஜயபாலன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இறைவனை வேண்டுகிறது..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

21.05.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.