;
Athirady Tamil News

அமரர் விஜயபாலன் நினைவாக “மாணிக்கதாசன் மறுமலர்ச்சி கல்விக்கூட” மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள்.. (வீடியோ படங்கள்)

0

அமரர் விஜயபாலன் நினைவாக “மாணிக்கதாசன் மறுமலர்ச்சி கல்விக்கூட” மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.. (வீடியோ படங்கள்)

அமரர் விஜயபாலன் ஐயா நினைவாக மாணிக்கதாசன் மறுமலர்ச்சி கல்விக் கூட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
#################################

வவுனியா செக்கடிபுலவு செல்வாநகரில் இயங்கி வரும் “மாணிக்கதாசன் மறுமலர்ச்சி கல்விக்கூடத்தில்” மாலை நேரத்தில் இலவச கற்றல் செய்பாடுகளில் பயன்பெறும் மாணவர்களுக்கு அமரர் ஆறுமுகம் விஜயபாலன் ஐயாவின் முதலாமாண்டு நினைவு தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சாவகச்சேரி, டச்சு வீதி மருதடியைச் சேர்ந்தவரும், ஐக்கிய இராச்சியத்தின் Luton பிராந்தியத்தில் வசித்தவருமான அமரர் ஆறுமுகம் விஜயபாலனின் முதலாமாண்டு நினைவாக, சுவிஸ் நாட்டில் சொலோத்தூண் பகுதியில் வதியும் புளொட் அமைப்பின் உறுப்பினர் தோழர் லெனின் என அழைக்கப்படும் சிவகுரு செல்வபாலன் அவர்களின் புதல்வர்களான S. ஈழதர்சன், S. யாழீசன் ஆகியோரின் நிதிப் பங்களிப்பின் மூலமே மேற்படி உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.

மேற்படி நிகழ்வுக்கு விசேட அழைப்பாளராக அழைக்கப்பட்ட வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் தோழர் யோகன் என அழைக்கப்படும் திரு.தர்மலிங்கம் யோகராஜா அவர்கள் கலந்து கொண்டு மாணிக்கதாசன் மறுமலர்ச்சி கல்விக் கூடத்து மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

அமரர் ஆறுமுகம் விஜயபாலன் ஐயா அவர்கள் வாழும் காலத்தில் “கல்விக்கு உதவியென கேட்போர் அனைவருக்கும்” வாரி வாரி வழங்கிய பெருவள்ளலாக இருந்தார்.

அன்னாரின் நினைவாக எமது “மாணிக்கதாசன் மறுமலர்ச்சி கல்விக்கூடத்தின் மாணவர்களுக்கு சுவிஸ் சொலத்தூண் மாநிலத்தில் வசிக்கும் லெனின் என புளொட் தோழரான திரு சிவகுரு செல்வபாலன் அவர்களின் புதல்வர்களான ஈழதர்சன் யாழீசன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது.

கல்வி அபிவிருத்திக்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்து கல்வியே எதிர்காலத்தில் எம்மை நிலைத்திட செய்யும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட அறப்பணிச் செம்மல் அமரர் ஆறுமுகம் விஜயபாலன் அவர்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் மாணிக்கதாசன் மறுமலர்ச்சி கல்விக் கூடத்து மாணவ செல்வங்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஐயாவின் ஆத்ம சாந்தி பெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம்..

கற்றல் உபகரணங்கள் வழங்கிய அருட்கொடையாளர்களையும் வாழ்த்தி நன்றி கூறுகின்றோம்..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
22.05.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.