;
Athirady Tamil News

சுவிஸ் ஆதியின் 18 வது பிறந்தநாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)

0

சுவிஸ் ஆதியின் 18 வது பிறந்தநாளில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)
#################################

யாழ் வேலணை மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமதி சுதாகரன் கிருபாதேவி (செல்வி) தம்பதிகளின் ஏக புத்திரன் செல்வன்.ஆதி அவர்களின் பதினெட்டாவது பிறந்த நாள் விழாவினை தாயக உறவுகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

திரு.திருமதி சுதா செல்வி தம்பதிகள் தங்களின் குடும்பத்தின் பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக தாயக உறவுகளுக்கு கடந்த பல வருடங்களாக உதவி செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தாங்கள் வாழும் தேசத்திலே பல்வேறு சமய, சமூகநல அமைப்புக்களின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து தன்னார்வத் தொண்டுகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக பலதரப்பட்ட சமூகப் பங்களிப்பினை தொடர்ந்து செய்து வருகின்ற திரு.திருமதி. சுதா செல்வி தம்பதிகளின் ஏகபுதல்வன் செல்வன்.ஆதியின் பதினெட்டாவது பிறந்த நாள் நிகழ்வினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பில் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் கேக் வெட்டி தாயக உறவுகளினால் கொண்டாடப்பட்டது.

அதேவேளை தங்களது ஏக புதல்வன் செல்வன்.ஆதியின் பதினெட்டாவது அகவை நாளில் வவுனியாவின் பல்வேறு கிராமங்களில் மிகவும் வறிய நிலையில் வாழும் குடும்பங்களை தெரிவு செய்து அவர்களுக்கு பெறுமதிமிக்க உலருணவுப் பொதிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் வழங்கி வைக்கப்பட்டது.

சுவிஸ் சுதா செல்வி தம்பதிகளின் ஏக புதல்வன் செல்வன்.ஆதி அவர்களின் பிறந்த நாளில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக பலவேறு உதவிகள் தாயக உறவுகளுக்கு ஏற்கனவே வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே இன்றைய நாளிலும் பல்வேறு நிலைகளில் நலிவுற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்வாதார உதவியாக பெறுமதிமிக்க உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்க “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” ஏற்பாடு செய்திருந்த போதும் தீடீரென பெய்த மழை காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலருணவுப் பொதி வழங்கல் மீண்டும் இன்றைய நாளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது என மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாளில் இனிதான பிறந்த நாளினைக் கொண்டாடும் சுவிஸ் சுதா செல்வி தம்பதிகளின் ஏகபுதல்வன் செல்வன்.ஆதியின் தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வாழ்த்துவதோடு அவர்களின் நிதிப் பங்களிப்பில் நடைபெறும் சமூகநல திட்டங்கள் மேலும் தொடரவும் பல்கிப் பெருகவும் வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொண்கின்றோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

18.02.2022

சுவிஸ் ஆதியின் 18 வது பிறந்த நாளில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.