வேலணை அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் “விசேட அன்னதான” நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

வேலணை அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் “விசேட அன்னதான” நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
################################
வேலணையைச் சேர்ந்தவரும், அங்கு வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களது 25 ஆம் ஆண்டு சிரார்த்த ஆண்டுத் திவசத்தை முன்னிட்டு அன்னாரின் மகனும் சுவிஸ் நாட்டில் வாழ்பவருமான திரு.சுதாகரன் அவர்கள் தனது தாயின் ஆண்டுத் திவசத்தை பல்வேறு சமூகப் பங்களிப்புடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக ஒழுங்குபடுத்தி செய்து தரும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க முதல் நிகழ்வாக ஈச்சங்குள பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கும் குடும்பத்தினருக்கு கோழியும் கோழிக் குஞ்சுகளும் வழங்கி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.
வவுனியா ஈச்சங்குளம் பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுடன் வதியும் திரு.திருமதி இராஜகோபால் திலீபன் குடும்பத்தினர், “தாம் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது குழந்தையும் தமக்கு பிறக்கவுள்ள நிலையில், தமக்கு கோழிகளுடன் கூடிய சிறிய கோழிக்கூடு உள்ளது, ஆயினும் தற்போதைய நாட்டின் சூழ்நிலை காரணமாக பொருளாதாரக் கஸ்ரத்தில் உள்ளதினால் மேலதிகமாக சில கோழியும், கோழிக்குஞ்சசுகளும் வாங்கித் தந்துதவுமாறு அப்பிரதேச “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” இணைப்பாளர்களான திருமதி.ஜெயந்தினி, திரு இராகுலன் ஆகியோர் ஊடாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” முன்வைத்த கோரிக்கையை சுவிஸ் நாட்டில் புரூக்டோர்ப் எனுமிடத்தில் வதியும் திரு.திருமதி. சுதாகரன் செல்வி குடும்பத்திடம் தெரிவித்து அவர்களின் நிதிப் பங்களிப்பில் மேற்படி வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று மதியம், “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களது 25 ஆம் ஆண்டு சிரார்த்த ஆண்டுத் திவசத்தை முன்னிட்டு வன்னிக் கிராமமொன்றில் இன்று அவரது நினைவாக விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் அக்கிராமத்தில் உள்ள பெருமளவானோர் கலந்து சிறப்பித்ததுடன், இருபத்தைந்தாம் ஆண்டு அந்தியேட்டி நிகழ்வில் அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டு தேவார பாராயணம் பாடப்பட்டு அந்தியேட்டிக் கிரியைகள் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது
மேற்படி அன்னதான நிகழ்வானது அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள் சார்பாக அன்னாரின் மகனான சுவிஸ் பேர்ண் பூர்க்டோர்ப் மாநிலத்தில் வசிக்கும் திரு.திருமதி சுதாகரன் செல்வி தம்பதிகளின் நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்வானது “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி. பவளராணி நவரெட்ணம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட பொறுப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன், திருமதி.அரியரெட்ணம் ஜெயா (சிவபுரம் ஆசிரியை), திருமதி.யசோதினி (பொதுசேவையாளர்), திருமதி.குமாரசுவாமி (முன்னாள் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்), “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.பவளராணி நவரெட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வுக்காக நிதிப் பங்களிப்பு வழங்கிய திரு.திருமதி. சுதாகரன் செல்வி குடும்பத்துக்கும், இதனை முன்னின்று நெறிப்படுத்தும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கும்” கலந்து கொண்ட அக்கிராம மக்களினால், மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” இன, மத, பிரதேச வேறுபாடுகளை மட்டுமல்ல அரசியல் வேறுபாடுகளையும் கடந்து நடுநிலைமையுடன் அனைத்து மக்களையும் வாழ்வாதாரத்தில் முன்னேற்றவும், மற்றும் மாணவ மாணவிகளின் கல்விக்கு கரம் கொடுக்கவும் வேண்டுமெனும் ஒரே நோக்கில் செயல்பட்டு வருவதும், அதன் உயரிய நோக்கமாக “தடைகளைத் தகர்த்து சமூகத்தை உயர்த்து” எனும் குறிக்கோளில் செயலாற்றுவது நீங்கள் அறிந்ததே..
தொடர்ந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு நிதிப்பங்களிப்பு தந்து, சமூகப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் “சமய, சமூகத் தொண்டர்களாக” திரு.திருமதி. சுதாகரன் செல்வி தம்பதிகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தாயக சொந்தங்களோடு இணைந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, இறையடி சேர்ந்த அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எந்நாளும் இறைவனை இறைஞ்சு வேண்டுகிறோம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
04.06.2022
வேலணை அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் “விசேட அன்னதான” நிகழ்வு.. (வீடியோ)
வேலணை அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos
வேலணை அமரர் சீவரத்தினம் கனகம்மா அவர்களின் சிரார்த்த தினத்தில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)