;
Athirady Tamil News

புங்குடுதீவு “அமரர் சி.சிவராஜா“ அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக “வாழ்வாதார உதவிகள்” வழங்கல்.. -படங்கள், வீடியோ-

0

புங்குடுதீவு “அமரர் சி.சிவராஜா“ அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக “வாழ்வாதார உதவிகள்” வழங்கல்.. -படங்கள், வீடியோ-

அமரர். சிவராஜா சின்னத்துரை

பாசத்தைப் பயிராக்கி நேசத்தை உறவாக்கி
நேர்மையுடன் வாழ்ந்த எங்கள் ஐயா
காலத்தை வீணாக்காது கம்பீர நடையுடன்
உமது வாழ்நாளைப் போக்கி வந்தீரே..

எல்லோருடனும் இனிமையாய் பழகி
எம்மையும் இனிதாய் வழி நடத்தி வந்தீர்..

உள்ளத்தை ஒருங்கிணைத்து
ஒற்றுமையை வலுப்படுத்தி
உமக்கென சில உறவுகளையும் உருவாக்கி வந்தீரே..

இவற்றையெல்லாம் செய்து விட்டு எங்களுடன்
இருக்காமல் இறைவனின் அரவணைப்பை
எளிதில் நாடிச் சென்றதேனோ..

புங்குடுதீவைச் சேர்ந்தவரும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர். சிவராஜா சின்னத்துரை அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக; அவரது மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவுகள் சார்பாக அன்னாரின் அன்புத்தம்பி குடும்பமான திரு.திருமதி. சி. இலக்ஸ்மணன் லலிதா மற்றும் பெறாமக்கள் லாவண்யா, லக்சனா, லவன் ஆகியோர் வழங்கிய நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக இன்றையதினம் முதல் நிகழ்வாக வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகளும், பயன்தரு தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

அமரர். சிவராஜா சின்னத்துரை அவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி ஆரம்பத்தில் வங்கி முகாமையாளராகக் கடமையாற்றி, பின்னர் வடமாகாண வங்கிப் பொறுப்பாளராக தரமுயர்ந்து சிறந்த சேவையாற்றியவர். எப்போதும் புன்முறுவலுடன் அன்பாக அனைவருக்கும் உதவி செய்யும் மனதோடு வாழ்ந்து அனைவரின் மனங்களிலும் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமரர். சிவராஜா சின்னத்துரை அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக; வவுனியா வெங்கலசெட்டிக்குளம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரமணாளங்குளம் வடகாடு பகுதியில் உள்ள அயல்கிராமங்களான மூன்று கிராமத்தைச் சேந்தவர்களுக்கான உதவியாக மேற்படி நிகழ்வு நடத்தப்பட்டது.

அமரத்துவமடைந்த அமரர். சிவராஜா சின்னத்துரை அவர்களின் நினைவாகவும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முதலில் அன்னாரின் திருவுருவப் படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு, தேவாரபாராயணம் பாடப்பட்டு பொதுமக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.இன்றைய முப்பத்தியொராம் நாள் அந்தியேட்டி நிகழ்வில் அக்கிராம சிறுவர், சிறுமியர் அவர்களின் பெற்றோர்கள், அக்கிராமப் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இருந்தனர். இன்றைய மேற்படி நிகழ்வில் பெருமளவான கிராம மக்கள் கலந்து கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் இன்றைய இக்கட்டான பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உடனடி அத்தியாவசியத் தேவையான பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் அமரத்துவமடைந்த அமரர். சிவராஜா சின்னத்துரை அவர்களின் நினைவாக பயன்தரு தென்னைமரக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அவரின் நினைவாக பயன்தரு தென்னைமரக் கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதும் சிறப்பம்சமாகும்.

இதனைத் தொடர்ந்து அமரர். சிவராஜா சின்னத்துரை அவர்களின் நினைவாக, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் “நினைவுக் கஞ்சியும்” வழங்கி வைக்கப்பட்டதுடன், அவர்களின் குடும்பத்தினர், உறவுகளுக்கென வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது..

நாளாந்த வருமானத்தை இழந்து அடுத்தவேளை உணவுக்காக அந்தரப்படும் உறவுகளுக்கு குறிப்பாக பல்வேறு நிலைகளில் நலிவுற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கும், வறுமைக் கோட்டில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை சேர்ந்த சிலருக்கும் வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக வழங்கி வைத்தனர்.

அமரர். சிவராஜா சின்னத்துரை அவர்களின் முப்பத்தியொராம் நினைவு நாளை முன்னிட்டு மேற்படி நிகழ்வானது “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் ஒழுங்கமைப்பில், பிரமணாளங்குளம் வடகாடு பகுதியைச் சேர்ந்த சனசமூக நிலையத் தலைவரும், கமக்கார அமைப்பு மற்றும் சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினருமாகிய திரு.சிதம்பரம் தர்மகுமார், பிரமனாலங்குளம் விக்கினேஸ்வரா வித்தியாலய பாடசாலை செயலாளரும், அப்பிரதேச சமூர்த்தித் தலைவியுமான திருமதி. சந்திரலிங்கம் வளர்மதி ஆகியோர் விருந்தினராகக் கலந்து சிறப்பிக்க நடைபெற்றது.

இதேவேளை இன்றுமதியம் அமரர்.திரு.சிவராஜா சின்னத்துரை அவர்களின் மூத்த சகோதரரான அமரர் திரு.சரவணபவன் சின்னத்துரை அவர்களின் முதலாமாண்டு நினைவுதின நிகழ்வும் நடைபெற உள்ளது. அமரர்.திரு.சிவராஜா சின்னத்துரை அவர்களின் முப்பத்தியொராம் நாள் ஆகிய இன்றே அமரர் திரு.சரவணபவன் சின்னத்துரை அவர்களின் முதலாமாண்டு திதி நாளும் இன்றையதினம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமரத்துவமடைந்த அமரர்.திரு.அமரர். சிவராஜா சின்னத்துரை அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு “அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி” அஞ்சலி செலுத்துவதோடு

அமரர் திரு. சிவராஜா சின்னத்துரை அவர்களது 31 ஆம் நாள் நினைவாக அனுஸ்டிக்கப்பட்டு, 31 ஆம் நாள் அந்தியேட்டி நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரின் அன்புத்தம்பி குடும்பமான திரு.திருமதி. சி. இலக்ஸ்மணன் லலிதா மற்றும் பெறாமக்கள் லாவண்யா, லக்சனா, லவன் ஆகியோருக்கு பயனாளிகள் மற்றும் தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

21.09 2022.

புங்குடுதீவு “அமரர் சி.சிவராஜா“ அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக “வாழ்வாதார உதவிகள்” வழங்கல்.. -வீடியோ-

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.