;
Athirady Tamil News

திருமதி ஆனந்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் சிறப்பாக நடைபெற்றது.. (படங்கள், வீடியோ)

0

திருமதி ஆனந்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் சிறப்பாக நடைபெற்றது.. (படங்கள், வீடியோ)
#############################

லண்டனில் இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி ஆனந்தி கருணைலிங்கம் அவர்களின் நிதிப்பங்களிப்பில் அவரது பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் உள்ள மக்களுடன் சிறப்பாகக் கொண்டாடியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

புங்குடுதீவைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரும் லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகசபை செயலாளரும், சமூக சமயத் தொண்டருமான கண்ணன் ஐயா என அன்புடன் அழைக்கப்படும் கருணலிங்கம் அவர்களின் மனைவியும், அக்குடும்பத்தின் மூத்த மருமகளுமான லண்டனில் வதியும் திருமதி.ஆனந்தி கருணலிங்கம் அவர்களின் இன்றைய பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் கொண்டாடப்பட்ட்து.

வவுனியா கிராமமொன்றில் குறிப்பிட்ட பிரதேச சிறுவர்கள் சிறுமிகள் மற்றும் பெரியோர்களென பலரும் கலந்து கொண்டு திருமதி ஆனந்தி அக்கா அவர்களது பிறந்தநாள் நிகழ்வை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் பிறந்தநாள் பாட்டுப்பாடி கேக் வெட்டி அகமகிழ்ந்து கொண்டாடினார்கள். பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது..இத்துடன் பிறந்த நாளை முன்னிட்டு அக்கிராமத்தில் உள்ள மாலைநேர வகுப்புக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைத்தனர்.

லண்டனில் வசிக்கும் ஆனந்தி அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு வவுனியா நெளுக்குளம் பாரதி பாலர் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக மாணவ சிறார்களும், பெற்றோர்கள் கலந்து கொண்டு லண்டனில் வசிக்கும் திருமதி.ஆனந்தி கண்ணன் அவர்களின் சார்பாக கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

வவுனியா பாரதி பாலர் முன்பள்ளி மாணவனின் தாயார் திருமதி.விதுசன் யதுஷாலினி வேண்டுகோளுக்கு இணங்க சமூக சேவையாளரும், ஊடகவியலாளருமான திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைபில் முன்பள்ளியின் ஆசிரியர் திருமதி.மதுகுமாரி சுதர்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள், முன்பள்ளியின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் சிவகுமார் தேவநாயகி அவர்களும் சிறார்களின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

தாயக சொந்தங்களின் தற்போதைய வாழ்வியல் சூழ்நிலையில், அவர்களின் வாழ்வியல் ஆதாரமாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தொடர்ந்து தனது பங்களிப்பினை செய்து வருகிறது.

அந்தவகையில் இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி ஆனந்தி கருணைலிங்கம் அவர்களை தாயக உறவுகளோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தேக ஆரோக்கியத்துடன் சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்,
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
09.06.2025

திருமதி ஆனந்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் சிறப்பாக நடைபெற்றது.. (வீடியோ)


“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.