;
Athirady Tamil News

கேரளாவில் ஒரே நாளில் 5,405 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

0

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,535 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 51,35,390 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 4,538 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 50,61,906 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 44,124 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 64,191 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் திருவனந்தபுரத்தில் அதிகபட்சமாக 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 822 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.