;
Athirady Tamil News

மீண்டும் மின்வெட்டு – இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!!

0

எரிபொருள் நெருக்கடி காரணமாக மீண்டும் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் நெருக்கடி காரணமாக சப்புகஸ்கந்த அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

நீர் மின் உற்பத்தியும் குறைக்கப்பட்டால் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.