;
Athirady Tamil News

வவுனியாவில் கத்தியை காட்டி முதியவரிடம் பணம் பறிக்க முற்ப்பட்ட மர்மநபர்! பொலிசார் விசாரணை!

0

வவுனியாவில் கத்தியை காட்டி முதியவரிடம் பணம் பறிக்க முற்ப்பட்ட மர்மநபர்! பொலிசார் விசாரணை!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த மர்மநபர் அங்கிருந்த முதியவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட சம்வம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று (27.07) காலை குறித்த முதியவரின் மனைவி வெளியில் சென்றுள்ளார்.

இதனையடுத்து துவிச்சக்கரவண்டி ஒன்றில் சென்ற மர்மநபர் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த முதியவரை மிரட்டி ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை தருமாறு அச்சுறுத்தியுள்ளார்.

முதியவர் பணத்தை கொடுக்காத நிலையில் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மர்மநபர் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.