;
Athirady Tamil News

யாழ் – கொக்குவில் இந்துக் கல்லூரியின் மூன்று மாடி கட்டிடம் இன்றைய தினம் அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்டது.!! (படங்கள், வீடியோ)

0

யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியின் மூன்று மாடி கட்டிடம் இன்றைய தினம் அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் நிதியுதவியில் இந்த கட்டிட தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நீதி அமைச்சர் மொகமட் அலி சப்ரி, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், நீதியமைச்சின் செயலாளர் மாயதுன்னை, வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.