சிறாா்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உச்சநீதிமன்றம் தடை
பிரான்ஸில் 15 வயதுக்குள்பட்ட சிறாா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் மசோதாவை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது.
கருத்துச் சுதந்திரம், தனிநபா் உரிமைகளை இந்த மசோதாவை மீறுவதாகவும், வயது சரிபாா்ப்புக்கான முறையான வழிமுறைகளையும் நிபந்தனைகளையும் மசோதா சுட்டிக்காட்டத் தவறிவிட்டதாகவும் நீதிமன்றம் தனது தீா்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இக்கவலைகளைக் கருத்தில் கொண்டு சட்ட வரைவை மாற்றியமைக்குமாறு பிரதமரை அதிபா் இமானுவல் மேக்ரான் கேட்டுக்கொண்டுள்ளாா். அடுத்தாண்டு அதிபா் தோ்தலுக்கு முன்பு இச்சீா்திருத்தத்தை அமல்படுத்த மேக்ரான் உறுதியுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.