;
Athirady Tamil News

வவுனியாவில் அதிபர் ஞாபகர்த்த மண்டபம் திறப்புவிழாவும், ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வும்.!! (படங்கள்)

0

வவுனியா பெரிய கோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில்,
சோமசுந்தரம் ஞாபகர்த்த மண்டபம் திறப்பு விழாவும், ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலை அதிபர் எஸ்.வரதராஜா தலைமையில் இன்று (03) நடைபெற்றது.
ஏற்றிவிட்ட ஏணிப்படிகளை அன்போடு வரவேற்கிறோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வானது பாடசாலை பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மாலை அணிவித்து பாண்டுவாத்தியங்கள் முழங்க, மாணவர்களின் கோலாட்டத்துடன் நடைபவனியாக அழைத்து வரப்பட்டனர்.

பெரிய கோமரசங்குளம் பாடசாலையில் 25 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய அதிபர் நடராசா சோமசுந்தரம் அவர்களின் ஞாபகர்த்த மண்டபம் திறப்பு விழாவும், அவர் காலத்தில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்புரையினை, ஓய்வுநிலை பீடாதிபதியும், நீம் நிறுவனத்தின் செயலாளருமான க.சுவர்ணராஜா நிகழ்த்தியிருந்தார்.

நிகழ்வில், ஆசிரியர்கள், அதிபர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.