;
Athirady Tamil News

கெப் வாகனத்தில் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட யுவதி!

0

வேலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த 29 வயது யுவதி ஒருவர் துர்திஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

மதுகம பிரதேச செயலகத்தில் பணி புரியும் அவர் நேற்றைய தினம் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்துக்கு உள்ளானத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மத்துகமவில் இருந்து அலுத்கம நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதி, வெலிபன்ன சந்தியில் இருந்து திடீரென பிரதான விதிக்கு பிரவேசித்த கெப் வாகனத்தில் மோதுண்டுள்ள நிலையில் பிரதான வீதிக்கு தூக்கி எறியப்பட்டுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் எதிர்த்திசையில் பயணித்த சிறிய ரக லொறி ஒன்றில் யுவதி மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெலிபன்ன பொலிஸாரினால் இரண்டு வாகனங்களினதும் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்தில் மதுகம பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.