;
Athirady Tamil News

துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் விா்ஜீனியா பல்கலைக்கழகம் மூடல்!

0

அமெரிக்காவின் புகழ்பெற்ற விா்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5 போ் காயமடைந்தனா். இதையடுத்து, பல்கலைக்கழக வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டு, பின்னா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது.

மாணவா் விடுதிகளுக்கு அருகே கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, அடையாளம் தெரிய நபா்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் இச்சம்பவம் மாணவா்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதால், உள்ளூா் காவல்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.