;
Athirady Tamil News

22 தமிழக மீனவர்கள் கைது!! (படங்கள், வீடியோ)

0

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்கள் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – காரைநகரை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மற்றும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் – மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

தொடர்ந்து மீனவர்களுக்கு கொரோனா மற்றும் மலேரியா தொற்று தொடர்பில் சுகாதாரத்துறையினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மீன்பிடி நீரியள் வள திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.