;
Athirady Tamil News

இங்கிலாந்தில் நடைபெறும் பன்னாட்டு விமான பயிற்சியில் 5 தேஜாஸ் விமானங்கள்…!

0

இங்கிலாந்தில் வட்டிங்டன் நகரில் அடுத்த மாதம் 6-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை பன்னாட்டு விமான பயிற்சி நடக்கிறது. அதற்கு ‘கோப்ரா வாரியர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில், இந்திய விமானப்படையும் பங்கேற்கிறது. அதற்காக இலகு ரக போர் விமானமான தேஜாஸ் விமானங்களை அனுப்பி வைக்கிறது. 5 தேஜாஸ் விமானங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

அந்த விமானங்கள், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் விமானங்களுடன் இணைந்து சாகசத்தில் ஈடுபடும். ஏற்கனவே இந்த விமானங்கள் சமீபத்தில் நடந்த சிங்கப்பூர் விமான சாகச நிகழ்ச்சியிலும் பங்கேற்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.