;
Athirady Tamil News

4,000 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில்…!!

0

சுமார் 4,000 உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் தற்போது இலங்கையில் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்கள் 30 நாட்களுக்காக இந்நாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த சுற்றுலாப் பயணிகளின் விசா 30 நாட்களில் காலாவதியாகிவிடும்.

எவ்வாறாயினும், உக்ரேனில் நிலவும் மோதல் காரணமாக இலங்கையில் தங்க விரும்பும் சுற்றுலா பயணிகளின் விசாவை நீட்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுலா அமைச்சு சம்பந்தப்பட்ட பயண முகவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் விசா காலாவதியான பின்னர் உக்ரைனுக்கு நேரடி விமான சேவைகள் இருக்காது என்பதால் அவர்கள் வேறு நாடுகளின் ஊடாக அவர்களின் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு முகவர் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.