;
Athirady Tamil News

22,443 பேர் சிகிச்சையில்!!

0

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 195 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 609,680 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்தும் 22,443 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 648,410 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 16,287 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.