;
Athirady Tamil News

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு !!

0

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கை கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே இன்று (07) ஒத்திவைத்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து பொதுமக்களை அசௌகரியத்துக்கு உள்ளாகியதாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, ​​சந்தேக நபர்கள் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக நெடுஞ்சாலையை மறித்து பொது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில், தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் ரொஜர் செனவிரத்ன ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.