;
Athirady Tamil News

ஐ.ம.ச தலைமையகம் மீது முட்டை வீச்சு !!

0

பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தின் மீது போராட்டக்காரர்களால் முட்டை வீச்சுத் தாக்குதல் நடத்ததப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கம் மக்களுக்கு என்ன செய்தது என கேள்வி எழுப்பி, பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினருடன் வருகை தந்த சிலர் முதலில் போராட்டத்தை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகேயுடன் சென்ற குழுவினர் போராட்டத்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகம் மீது முட்டைகளால் தாக்குதல் நடத்தியதுடன், அலுவலகத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.