;
Athirady Tamil News

கிண்ணியாவில் துப்பாக்கிச்சூடு !!

0

திருகோணமலை – கிண்ணியா, நடுவூற்று பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் 30 மற்றும் 35 வயதுகளை உடைய இருவரே காயமடைந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.