;
Athirady Tamil News

யாழ். கொழும்புத்துறையில் இன்று மதியம் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!

0

யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் இன்று மதியம் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்புத்துறையைச் சேர்ந்த சு.சுதர்சன் என்ற 29 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.

சீமெந்து கல் அரியும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சார வயரில் இருந்து ஏற்பட்ட மின் ஒழுக்கால் கல் அரியும் இயந்திரத்துக்கு மின் பாய்ந்துள்ளது என்றும், இயந்திரத்தை இயக்கிய இளைஞர் மின் தாக்கத்துக்கு இலக்கானார் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.