;
Athirady Tamil News

யாழுக்கு கடத்தி வரப்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு!! (படங்கள்)

0

சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட முதிரை மரக் குற்றிகள் கைதடியில் யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கைதடி பகுதியில் சந்தேகத்துக்கிடமான வாகனத்தை சோதனை செய்த பொழுது அனுமதிப்பத்திரம் இல்லாத சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 4 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த 8 முதிரை மர குற்றிகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு மானிப்பாய் பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மற்றும் கைப்பற்றப்பட்ட வாகனம்,மரக்குற்றிகளை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.