;
Athirady Tamil News

சுமார் 6 கோடி பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு !!

0

மன்னார் தெற்கு கடலில் நேற்று சுமார் 6 கோடி ரூபா பெறுமதியுடைய கேரள கஞ்சா போதைப் பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 177 கிலோ 60 கிராம் கேரள கஞ்சாப் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் முன்னெடுத்துவரும் சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் காரணமாக குறித்த போதைப் பொருள் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாப் போதைப் பொருளை தீவைத்து அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிடுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.