;
Athirady Tamil News

மானிப்பாய் பிரதேச சபையில் ஜனாதிபதியின் உருவ பொம்மை எரிப்பு – சபைக்கு சிலுவை தாங்கியும் உறுப்பினர் வருகை!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சிலரால் ஜனாதிபதியின் உருவ பொம்மை சபை முன்பாக தீட்டியிட்டு கொளுத்தப்பட்டது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின்(மானிப்பாய்) அமர்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தவிசாளர் அ. ஜெபநேசன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த அமர்வில் கலந்து கொள்வதற்கு வந்த சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியின் உருவ பொம்மையை இழுத்து வந்து சபை முன்றலில் தீயிட்டு கொளுத்தினர்.

அதேவேளை உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரி சபை உறுப்பினர் சிலுவை தாங்கி சபைக்கு வந்தார்.

அத்துடன் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்டவற்றால் நாடு அரை அம்மணமாக உள்ளதாக தெரிவித்து , தானும் அரைகுறையான ஆடை அணிந்து வந்து சபை அமர்வில் உறுப்பினர் ஒருவர் கலந்து கொண்டிருந்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.