;
Athirady Tamil News

குறைந்த விலையில் உணவகங்கள்: புதிய திட்டம் !!

0

நாடளாவிய ரீதியில் குறைந்த கட்டணங்களைக் கொண்ட உணவகங்களை திறப்பதற்கான யோசனை ஒன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவின் விசேட நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்கு இது ஒரு தீர்வாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் மற்றும் இலகுவாக உணவுகளை தயாரிக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

எரிவாயு பற்றாக்குறையினால் நாடளாவிய ரீதியில் சுமார் 30 வீதமான உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையிலேயே இலங்கை போஷாக்கு சங்கம் இந்த யோசனையை முன்வைத்துள்ளது. மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக தற்போது மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.